கிளிநொச்சி அருகே பரந்தன் வயல் பகுதியில் வெடிகுண்டு கண்டெடுப்பு

இலங்கை, கிளிநொச்சி அருகே பரந்தன் பகுதியில் உள்ள வயல் பகுதியில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வெடி பொருள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிரடிப் படையினர், ராணுவத்தினர் மற்றும் போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள வயல் வெளியில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் வெடிபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிபொருளை மீட்ட போலீசார், நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, செயலிழக்க வைத்தனர்.

Exit mobile version