நாடு பாதுகாப்பாக இருக்க பாஜக ஆட்சி தொடர வேண்டும்: ஜி.கே. வாசன்

நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிதும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பல்லடத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம் புதூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்ட அவர், முதல்வரும், துணை முதல்வரும் சாமானியர்களுடன் பழக கூடியவர்களாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version