மோடி பதவியேற்பு விழாவுக்கு பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இதனிடையே இந்தியாவின் நட்பு நாடுகளின் தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் உள்ள இலங்கை, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version