திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிள் திருட்டு

திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிளை திருடி சென்ற கொள்ளையனை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் எம்.வி.எம் .அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் அன்பரசு. வழக்கறிஞரான இவர் அப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பரசு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டை சுற்றி நோட்டமிட்ட கொள்ளையன் ஒருவன் திடீரென வீட்டின் சுவர் ஏறி குதித்து சிறிது நேரம் பதுங்கி இருந்தான்.

அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்தவுடன் வீட்டில் இருந்த விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை சுவற்றின் வழியாக இறக்கிவிட்டு கொள்ளையனும் தப்பிச் சென்றான். காலையில் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அன்பரசுஅளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version