குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கடந்த நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் நீக்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் குரூப் 4 கலந்தாய்வு இன்று தொடங்கியது. சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

Exit mobile version