தூங்கிக் கொண்டிருந்த பார் உரிமையாளரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள்

நெல்லையில் டாஸ்மாக் பார் உரியமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை மயிலபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் கொண்டாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார்.

மேலும் டாஸ்மாக் அருகே கோழி, ஆடுகளை வளர்த்தும் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது பண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த அவரை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கணேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்

Exit mobile version