தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் குப்பைகளில் வீச்சு

ஒசூரில் குப்பையில் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அள்ளி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சாலையோர குப்பை கொட்டும் இடத்தில் ஆயிரக்கணக்கான தடை செய்யப்பட்ட குட்கா,பான்பராக் உள்ளிட்ட  பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து குப்பையில் கொட்டப்பட்டு கிடந்த ஆயிரக்கணக்கான தடை செய்யப்பட்ட குட்கா,பான்பராக் பாக்கெட்டுகளை வாகனங்களில் அள்ளி சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version