100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மக்களவை தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரம் கிராம மக்கள் சார்பில் 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியத்தை வழியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் லந்து கொண்டனர். வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கமும் வழங்கப்பட்டது.

Exit mobile version