ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி வாகன பேரணி

திருச்செந்தூர் அருகே ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், ஹெல்மெட் அணியாமல், பெட்ரோல் பங்கிற்கு வந்தால் பெட்ரோல் தருவதில்லை எனும் புதிய முயற்சியை திருச்செந்தூர் வட்டார பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேருந்துநிலையத்தின் அருகே, பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது. இதை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version