`நீ அழகாக இல்லை’ – மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்!

பெங்களூர் மாரேனஹள்ளியைச்சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்து ஓராண்டாகிவிட்டது. திருமணமான 6 மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திடீரென மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டுள்ளார். அவர் தனது மனைவியிடம்,  “நீ பார்க்க அழகாக இல்லை, அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று சசிகுமார் கூறியுள்ளார்.

மேலும், விஜயலட்சுமியிடம் விவாகரத்து கொடுக்கும்படி கூறி, இரும்பு கம்பியால் சசிகுமார் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஒருக்கட்டத்துக்குமேல், கணவரின் கொடுமையை தாங்க முடியாமல், பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார் விஜயலட்சுமி.  பின்னர் விஜயலட்சுமியின் பெற்றோர், குடும்பத்தினர் சசிகுமாரை சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர் தங்களது மகளை சசிகுமாருடன் சேர்ந்து வாழ பெற்றோர் அனுப்பியுள்ளனர். இருந்தபோதிலும், தொடர்ந்து விவாகரத்து கேட்டு மிரட்டி வந்த சசிகுமார் ஹெல்மேட்டால் மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இது தொடர்பாக அப்பபகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version