பசுமையை மீட்டெடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மன்னார்குடி அருகே கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி அரேபியா நாட்டின் ஜெத்தா தமிழ் சங்கம் சார்பில் 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மானங்காத்தான் கோட்டகம் பகுதி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது .
இதையடுத்து பசுமையை மீட்டெடுக்கும் விதமாகவும், விவசாயத்தை மேம்படுத்தவும் சவுதி அரேபியா ஜெத்தா தமிழ்ச்சங்கம் சார்பில் முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மரக்கன்றுகளின் பயன்கள் மற்றும் அவற்றை பராமரிப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Exit mobile version