50 ரூபாய்க்கு 2 பிரியாணி வேண்டும் : மதுபோதையில் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்

வாணியம்பாடி பேருந்து நிலையத்திலுள்ள பிரியாணி கடை ஒன்றில், தகராறு செய்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு குடிப்போதையில் இருவர் பிரியாணி கடைக்கு வந்ததுள்ளனர். இருவரும் 50 ரூபாய் மட்டும் கொடுத்து 2 பிரியாணியை பார்சல் செய்து தருமாறு தகராறு செய்துள்ளனர்.

மேலும் கடையில் பணிபுரியும் ஊழியரையும் ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கலீம் வாணியம்பாடி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதை அடுத்து, கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version