ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:சோபியா கெனின் இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டியை வீழ்த்தி, அமெரிக்காவின் சோபியா கெனின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின்  ஆஸ்லே பார்டியும், அமெரிக்காவின் சோபியா கெனினும் மோதினர்.

இதில் சோபியா கெனின், 8 க்கு 6, 7 க்கு 5  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், சோபியா கெனின் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version