பணியின்போது உயிரிழந்த 3 காவலர்களுக்கு நிவாரணம் -முதலமைச்சர்

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றிய போது உயிரிழந்த காவலர்கள் 3 பேரின் குடும்பத்தாருக்கு, இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய ஜான்சன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகதாஸ் மற்றும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அறிவுடைநம்பி ஆகியோர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மூன்று காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version