அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் என விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையம் என விருது பெற்ற அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு அருப்புக்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாரட்டு விழா நடைபெற்றது.

கடந்த மாதம் ஒன்றாம் தேதி தென்மண்டல காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதில், மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்தார். மேலும் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கும் விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version