அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டம் அண்ணாநகர்

சென்னையில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டமாக அண்ணாநகர் உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளான திருமங்கலம், கோயம்பேடு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் 69 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 ஆயிரத்து 649 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து கேமரா பொருத்தும் பணியின் நிறைவு விழா அண்ணாநகரில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஒரே ஆண்டில் சென்னையிலேயே அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடமாக அண்ணாநகர் காவல் மாவட்டம் மாறியுள்ளது என்று கூறினார். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதிகளவு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.

Exit mobile version