அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாள் வரும் 23-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தலைமை செயலகத்திற்கு வருகை தந்த உமறுப் புலவரின் வாரிசுகள் மற்றும் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் திரு. ருமைசுதீன் ஃபைஸி உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இஸ்லாமிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version