திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் -அமைச்சர் தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண பணிகள் குறித்த ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, வீரமணி, ராஜேந்திர பாலாஜி, காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்திருப்பதாக கூறினார்.

வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்டிக்கொடுப்பது குறித்து மத்திய அரசிடம் முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

 

Exit mobile version