தமிழ்நாடு முழுவதும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பெண்களை இழிவுபடுத்தி வரும் திமுகவை கண்டித்தும், அந்த கட்சி தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்ற அவர்கள், ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆ.ராசாவை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற போராட்டத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Exit mobile version