கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

Exit mobile version