நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

அக்டோபர் 21 ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 

இதேபோல், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாங்குநேரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நாராயணன் வேட்பு மனுவை அளித்தார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்றனர். முன்னதாக அதிமுக நிர்வாகிகள் வேட்பாளர் நாராயணனுடன் ஊர்வலமாக சென்றனர்.

Exit mobile version