விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு

தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்த முடிந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version