வெற்றி அடைந்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச் செல்வன்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, விக்கிரவாண்டி தேர்தல் அலுவலகத்தில் முறையாக பெற்றுக்கொண்டார். இதையடுத்து, விக்கிரவாண்டியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, அதிமுக தொண்டர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதே போல், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் அலுவலகத்தில் முறையாக பெற்றுக்கொண்டார். இதையடுத்து, சான்றிதழை பெற்றுக்கொண்டு தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த, அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு அதிமுக தொண்டர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version