அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டனர். அதன்படி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாளை காலை 11.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களில், அதிமுக சார்பில் 3 பேரும், தி.மு.க. சார்பில் 3 பேரும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 13ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Exit mobile version