அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சரின் பயண விவரம் வெளியாகி உள்ளது.

வரும் 21ம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இருதொகுதிகளில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பயணம் விவரத்தை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 13, 14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். வரும் 15, 16, 18 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார். 

Exit mobile version