தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் கோடான கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு !
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலைக்கு மற்றும் குஷ்விற்கு எதிராக போராட்டம் !
அஇஅதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது !
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்று ஆலோசனை ஈடுபட்டனர் இதற்கு கழக அமைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மாநில நிர்வாகிகள், கழக துணை பொதுச் செயலாளர்கள் , மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனிடையே முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவியுமான அம்மா அவர்கள் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை எழுப்பினர் .
இதனை தொடர்ந்து தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு திரண்ட கழக தொண்டர்கள் புரட்சித்தலைவி அம்மாவிற்கு எதிராக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் அவர்கள் உடனடியாக இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் அதேபோன்று குஷ்புவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது பேசிய அவர்கள் அதிமுக தயவால்தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து குறை சொல்வதா? எங்களைப் பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுகவின் வரலாறு அவர்களுக்கு தெரியாது தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி. எங்கள் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். எனவே முந்திரிக்கொட்டை போன்று அண்ணாமலை முந்திக்கொண்டு ஏதும் பேசக்கூடாது அம்மாவை பற்றி அவதூறாக பேசியதற்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்கிறோம் என தெரிவித்தனர்.
Discussion about this post