மீண்டும் அதிமுக அரசு – வெளியான கருத்துக்கணிப்பு!

தமிழ்நாட்டில் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைய வேண்டும் என அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அசோகா அறக்கட்டளை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், மாவட்ட வாரிய எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு குறித்த விவரத்தை வெளியிட்டனர். அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அமைய 32 சதவீத மக்கள் விரும்புவதாக தெரிவித்தனர். திமுகவிற்கு 30 சதவிதமும், டிடிவி தினகரன், கமல் மற்றும் சீமான் ஆகியோர் ஆட்சிக்கு வர தலா 2 சதவீத மக்கள் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையில்லை என 32 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் வாரிசு மற்றும் குடும்ப அரசியலுக்கு 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 51 சதவீத பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் 52 சதவீத விவசாயிகள் அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version