28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் – பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

திருவிடைமருதூர் சந்திரகுளம், 28 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான 32 குளங்களில் ஒன்றான சந்திரகுளம் அமைந்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டியும், குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய பிரதான வாய்க்கால் முற்றிலும் துந்துபோய் பராமரிப்பின்றி காணப்பட்டுவந்தது. இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான 32 குளங்களையும் தூர்வாரி நீர் நிரப்பும் பணி நடைபெற்றுவருகிறது.

அதனடிப்படையில், சிங்கநீர் குளம், கணகதீர்த்த குளம் மற்றும் சந்திர குளம் உள்ளிட்ட குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version