முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய யுக்திகள் குறித்தும், அதிமுக வேட்பாளர்களை எவ்வாறு வெற்றி பெறச் செய்வது என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னால் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை முதலமைச்சர் வரவேற்றார்.

Exit mobile version