புத்திமதி கூறிய பெரியப்பாவை கொலை செய்த மகன்

புத்திமதி கூறிய பெரியப்பாவை, போதையில் இருந்த தம்பி மகனே அடித்து கொலை செய்த சம்பவம், தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெத்தணசாமி இவருக்கு வயது  80 இவருடைய மனைவி பெயர் சின்னதாய். இவர்களுக்கு ராமகிருஷ்ணன் ஒரு மகன் மற்றும் 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனைவி சின்னதாய்க்கு கண் பார்வை இல்லாததால் அதே பகுதியில் வசித்து வந்த அவர்களது மகள் வீட்டில் வசித்து வந்தார்.  ஆனால் பெத்தணசாமியோ அதே பகுதியில் தனது மகன் முறை உள்ள உறவுக்காரரான சிவகண்ணமூர்த்தி என்வரது வீட்டு  மாடியில் உள்ள சிறிய அறையில் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
 
இந்நிலையில் சிவக்கண்ண மூர்த்திக்கு கனகவேல் அய்யப்பன் என்ற தம்பி உள்ளார். பாலிடெக்னிக் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றித் திரிந்த கனகவேல் அய்யப்பன் குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு மாடியில் வசிக்கு தனது பெரியப்பா உறவுமுறை உள்ள பெத்தணசாமியுடனே தங்கி வந்துள்ளார்.
 
வழக்கம் போல் நேற்றும் குடித்துவிட்டு வந்த கனகவேல் அய்யப்பனிடம் பெத்தணசாமி ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என அறிவுரை கூறியுள்ளார்.  எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்ட கனகவேல் அய்யப்பன், அங்கிருந்த உருட்டுக்கட்டையால் தனது பெரியப்பாவின் தலையிலே அடித்துள்ளார்.
 
இதில் ரத்தக் வெள்ளத்தில் மயங்கி தரையில் விழுந்தார், போதையில் இருந்த கனகவேல் அய்யப்பன், பெரியப்பா மயக்கமடைந்துவிட்டார் என்று கூட தெரியாமல் அவரை அனைத்தபடியே  இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.
 
காலையில் போதை தெளிந்தவுடன் எழுந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பெரியப்பா இருப்பதை கண்டு தனது அண்ணனிடம் கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே  அவர் உயிரிழந்தார்.
 
இதற்கிடையே தனது பெரியப்பாவை கொலை செய்து விட்டதாக கனகவேல் அய்யப்பன் தேனி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.பின்னர் கனகவேல் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version