திமுகவினர் சொம்புக்குள் வைத்து பணம் கொடுத்தாலும் வெல்லப்போவது அதிமுகதான் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு விடியாத திமுக அரசின் நிர்வாகிகள் விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்பாக திமுகவினர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் புகாரளித்துள்ளார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விடியாத திமுகவினர் பணத்தை எவ்வளவு வாரி வாரி இறைத்தாலும் வெல்லப்போவது அதிமுகதான் என்றார். மேலும் தொடர்ந்து திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறினார். திமுகவினைத் தோற்கடித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் மகத்தான வெற்றியைப் பெறும் என்று உறுதியளிக்கக்கூடிய வகையில் பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

மேலும் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள், வாக்கு சேகரிக்கப் போகும் திமுக அமைச்சர்கள் பொதுமக்கள் ஆராத்தி எடுக்கும் சாக்கில் பணம் பட்டுவாடாவில் ஈடுபடுகிறார்கள். மேலும் சொம்புக்குள் வைத்து பணத்தைக் கொடுக்கிறார்கள். என்னென்ன விதிமீறல்களில் எல்லாம் ஈடுபடமுடியுமோ அத்தனையிலும் திமுககாரர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு தேர்தல் வந்தால் மட்டும்தான் மக்கள் கண்களுக்குத் தெரிவார்கள். மற்றபடி கண்ணுக்குத் தெரியமாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

Exit mobile version