அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற கனவு பலிக்காது – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், அதிமுகவினருக்கு அச்சத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பில் பேசி வருவதாக கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழ்ந்துவிடும் என பகல் கனவு காண்பதாக குற்றம்சாட்டிய அவர், அது என்றைக்கும் பலிக்காது என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றியின் மூலமாக, கட்சிக்கு எதிராகச் சதி செய்யும் கும்பலை வீழ்த்தப்படும் என்றும், இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.

Exit mobile version