அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.கவுக்கு தான் வெற்றி -அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் என எது வந்தாலும் அதனை சமாளிக்க அதிமுக தயாராக உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஓசூர் சிப்காட் தீயணைப்பு துறைக்கு கூடுதலாக 28 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய தீயணைப்பு வாகனத்தை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க அரசிற்கு வெற்றிக் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

டி.டி.வி ஆதரவாளர்களின் மேல் முறையீடு செய்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், இடைத்தேர்தல் , உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிப்பெறும் என்று உறுதிபடக் கூறினார்.

Exit mobile version