இன்றுடன் முடிகிறது வேட்புமனுத் தாக்கல்…தொடங்குகிறது அனல் பறக்க பிரச்சாரம்!

ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் வேட்புமனுத்தாக்கலானது இன்றுடன் முடிகிறது. குறிப்பாக மதியம் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அனல் பறக்க தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். முன்னதாக அதிகாலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டை அவர்களுடன் இணைந்து தனது பிரச்சாரத்தினைத் தொடங்கியிருந்தார் கே.எஸ்.தென்னரசு. இவர் செல்லும் இடங்களெல்லாம் மக்கள் அமோக வரவேற்பினை அளித்து வருகிறார்கள். நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பொதுமக்களின் மத்தியில் மலர்ந்துள்ளது.YouTube video player

Exit mobile version