தலைமைச்செயலக ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தலைமைச்செயலக ஊழியர்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்ரவரி 1ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தலைமைச்செயலக ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தலைமைச்செயலக ஊழியர்களின் போராட்டம் முடிவடைந்தது. இதையடுத்து தலைமைச்செயலக சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணி, மாணவர்களின் கல்வி உள்ளிட்டவைகள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

Exit mobile version