பிரதமர் மோடிக்கு அபுதாபி இளவரசர் சிறப்பான வரவேற்பு

பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அபுதாபி இளவரசர் முகமது பின் சையது பிரதமர் மோடியை வரவேற்றார். இதைத்தொடர்ந்து, இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப் பயணத்தின் போது, அந்நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில் RUPAY அட்டையின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கிறார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு தபால் தலையை அபுதாபி இளவரசருடன் இணைந்து மோடி வெளியிடுகிறார். பயணத்தின் இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. இதனையடுத்து, நாளை பஹ்ரைன் செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசுகிறார். பின்னர், 25 ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி, 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்.

Exit mobile version