ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞருக்கு தர்மஅடி

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர், அதே பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் அவருடன் கல்லூரியில் படித்த பெண்ணை ஒரு தலையால காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காதலை ஏற்க அந்த பெண் மறுத்த நிலையில், ஓடும் பேருந்தில் வைத்து ஜெகன் தாலி கட்ட முயன்றுள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே பேருந்தில் இருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version