தினகரன் பிரசாரக் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடியில் டிடிவி. தினகரன் மேற்கொண்ட பிரசாரத்தால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

அமமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புவனேஸ்வரனை ஆதரித்து தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இரவு 7 மணிக்கு பிரசாரம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5.30 மணியிலிருந்தே அவரது ஆதரவாளர்கள் சாலையில் கூடி, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version