பன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி, மூன்றடி கூட ஓடாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி போன்றது எனவும், அது மூன்றடி கூட ஓடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொழுதுபோகாத காரணத்தால் பன்னீரும், டிடிவியும் போராட்டம் அறிவித்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ், டிடிவி கூட்டணி அச்சாணி இல்லாத வண்டியாகும், ஆகவே அது நீண்ட நாட்கள் ஓடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்…? என்றும், மகளிர் உரிமைத்தொகை வழங்க போக்குவரத்து விதிமீறல் மூலம் டார்கெட் வைத்து அபராதம் வசூலிக்க காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை சென்று விட்டதாகவும், மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் ஸ்டாலின், போட்டோஷூட் மட்டுமே நடத்திக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Exit mobile version