நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு

நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

நாகையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சீரமைப்பு பணிகளுக்காக சுமார் 65 ஜே.சி.பி. இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.

இதே போல் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய சுமார் 60 தண்ணீர் லாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

Exit mobile version