ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்

சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் அடங்கிய கும்பல் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 2 இளைஞர்களை கைது செய்த சூளூர்பேட்டை போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version