மதுபோதையில் கல்லூரி மாணவரை கொலை செய்த சக நண்பர்கள்

தேனியில் மதுபோதையில் கல்லூரி மாணவரை கொலை செய்த சக நண்பர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியை சேர்ந்த நாகேந்திர பிரசாத் என்பவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சினிமாவிற்கு செல்வதாக கூறி சென்ற நாகேந்திர பிரசாத் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து நாகேந்திர பிரசாத்தை அவரின் பெற்றோர் தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டிற்குப் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் பலத்த காயங்களுடன் நாகேந்திர பிரசாத் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஹரிஹரசுதன், பாலாஜி, நவநீதகிருஷ்ணன், கண்ணன் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version