இலங்கையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு பீதி: கொழும்பு பகுதியில் தீவிர சோதனை

இலங்கை கொழும்பு அருகே மீண்டும் பரவிய வெடிகுண்டு பீதியால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கொழும்பு அருகேயுள்ள வெள்ளவத்தில் சவாய் திரையரங்கு பகுதியில், இருசக்கர வாகன இருக்கையின் பின்பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதை பரிசோதித்த வெடிகுண்டு நிபுணர்கள், இருசக்கர வாகன இருக்கையின் பின்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிறிய ரக வெடிபொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இதைத்தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு நகரில் பதற்றம் நீடிக்கிறது.

Exit mobile version