புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் தலைமையில் கஜா புயல் மீட்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதுவரை 80 சதவீத மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண நிதி வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version