வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகள் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே காரையூரில் ரஜினி என்பவர் தனது குடும்பத்தினருடன் உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 75 சவரன் நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version