தமிழகத்திற்கு வரும் உபரிநீரின் அளவு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

ஒகேனக்கல்லில், வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையிலுருந்து தமிழகத்திற்கு அதிகபட்சமாக 11 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு வரும் உபரிநீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போதைய நிலவரப்படி, 4 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 13-வது நாளாக தொடர்கிறது.

Exit mobile version