ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மண்டியா, தும்கூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள அணகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒகேனக்கலில் உள்ள அணைத்து அருவிகளிலும், நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக, பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version