பிணையில் வந்த நபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

சென்னை புளியந்தோப்பில் ஒருவர் ஓடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி டோபிகண்ணா ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் குமரன். தண்ணீர் கேன் சப்ளை செய்து வரும் இவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக்கொன்றது. குமரனின் மனைவி பாரதி, கடந்த வருடம் உடல்நிலையில் சரியில்லாமல் இறந்துள்ளார். இதனால் மனமுடைந்த குமரன், போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனிடையே டிபி சத்திரம் போலிசாரால் செயின் அறுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குமரன், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான்  ஜாமீனில் வந்துள்ளார். இவர் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது இந்நிலையில் கேஎம் கார்டன் இரண்டாவது தெருவில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் சராமாரியாக வெட்டப்பட்டு சம்பவ இடத்திலே குமரன், உயிர் இழந்துள்ளார். சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன், பவித்ரன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version