50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் மோகன்ரி மலை பகுதியில், 25க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்டு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version