ரயிலில் தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு

ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான 20 பவுன் தங்க நகைகளை மீட்ட தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் எழும்பூரில் இருந்து சென்ற உழவன் விரைவு ரயிலில் தன் உடமைகளை தவறவிட்டுள்ளார். இதையடுத்து இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் ஜெயலட்சுமி தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான 20 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை தஞ்சை இரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவற்றை ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version